சாதிவெறி இன்னும் தீரவில்லை


சாதிவெறி இன்னும்
சத்தியமாய் தீரவில்லை
எங்கள் தமிழ் போராட்டமும்
அவ்வெறியை தீர்க்கவில்லை

உயிர்ப் பூக்கள்

தமிழீழம் மலர்ந்து
தன் மானத்துடன் வாழவே
தானத் தலைவன்
தரணியில் அமைத்தான் புலிப்படை

மாறாதா விதி

விதியோ... வேளையோ
வேற்று நாடுகளில்
அகதிப் பதிவுகளோடு நாம்.
சொர்க்கம்தான்

நான்....!!


எனக்கு பசி தாகம் மோகம்
உடனே உடனே
ஒரேயடியாய் தீர்க்க
ஓரிடம் வேண்டும்

நீ....?


அன்றொரு நாள்
ஆகாயத்திலிருந்து
அரிசியும் மண்ணெண்ணெயும்
ஆகா வந்துவிட்டார்கள்
கொண்டாடினோம்
குதூகலித்தோம்
குட்டி கரணமடித்தோம்
வந்து லீழ்ந்தது எமது
வாய்க்கரிசியென்றும்
மண்ணெண்ணெய் எம்
மண்ணை கொழுத்த
என்று தெரியாமல்
வந்தோரை வரவேற்று
மாலைகள் மரியாதைகள்
ஒருவன் ஏதோ சென்னான்
ஓன்றும்புரியவில்லை
ஒருவர் மெழி யெர்த்தார்
கவலை வேண்டாம்
காப்பாற்றவந்துள்ளோம்
நன்றாய் உங்களை
பார்த்து கொள்வோம்
கைதட்டினோம்
பின்னர் தெரிந்தது
பார்த்து பார்த்து
கொன்றபோது
மொழிபெயர்ப்பு
பிழையென்று
தட்டிய கைகள்
கட்டிவீதியெங்கும்
விலங்குகள்போல்
கட்டிதூக்கியே
கோழிபோல்
உயிருடன் உரிக்கப்பட்டவர்
எத்தனை
அவர்களின்
காமக்கழிவுகழை
வெளியேற்ற
கழிவறைகளாய் போன
எம்மவர் எத்தனை
காணாமல் போனவர்
எத்தனை.
என்ன பார்க்கிறீர்கள்
உங்கள் கேள்வி
சிங்களவன் இத்தனையும்
செய்யவில்லையா??
செய்தான்
அவன் எம்எதிரி
அப்படித்தான்
செய்வான்
ஆனால்
நீ.....?

தீருமா யுத்தம்

வானத்தில் நட்சத்திரங்களை எண்ணிய − நாம்
இன்று யுத்தத்தின் கோரப் பிடியில் சிக்குண்டு
உயிர் மடிந்த பச்சிளம் குழந்தைகளினது
உடல்களை எண்ணுகையில் ஆயிரம் மலைகளை
மனதில் சுமப்பதாய் தாங்க முடியா பாரம்....

நேற்று வெண்ணிலாவைக் காட்டி சோறு ஊட்டிய
பையனை இன்று உயிரற்ற உடலைப் பார்த்து
துடி துடித்து கதறும் தாயின் துக்கத்தில் பங்கு
கொள்ளும் பொருட்டு இயற்கையும் மழையாய்
மாறி கண்ணீர் மழை பொழிந்தாள்....

பச்சைப் பசேலென்று கண்ணுக் கெட்டிய தூரம்
வரை தன் பசுமையால் கண்ணைக் கட்டிப்
போட்டு அழகு ராஜ்ஜியம் செய்து வந்த
மரங்கள் இன்று பறவை போல் இறக்கை
விரித்து வந்த விமானத்தின் மூலம் பொழியப்பட்ட
குண்டு மழையினால் பட்ட மரங்களாய் காட்சியளித்து.......

விடியும் ஒவ்வொரு பொழுதும் எமனுக்கு
கொண்டாட்டம்..பசிப்பிணியைப் போக்க மனித உயிரை
காவு கொண்டன ஆயுதங்கள்.....

ஆயுதங்களைப் தங்கமலைக் குவியலாய்
வாங்கி வாங்கி குவித்து பசியாலும்
யுத்தத்தாலும் கோரமாய் மரண தண்டனை
வழங்கியது அரசாங்கம்....

தீருமா இந்த யுத்தம்..
போக்குமா எம் அச்சத்தை...
துளிர்க்குமா பட்ட மரங்கள்..
நிலை நாட்டுமா வாழ்வில்
சந்தோஷத்தை இனிப் பிறக்கும்
சமுதாயமாவது யுத்த தாண்டவத்தைக்
காணாமல் பசுமையைக் காணட்டும்
வேண்டாம் இந்த யுத்தம் வளர்ப்போம்
சமத்துவத்தை......

தமிழினம்


பலகாலம் வதைபட்டு
சிங்கள இனவெறியரால்
எமதினம் சிதைபட்டு
திட்டமிட்டு அழிபடும் வேளையிலே

தமிழினம்

வீர தீபம் கார்த்திகை 27

தீவினில் ஒரு தீபம்
அது வீர தீபம்
உடல்தனை உருக்கி
உயிரினை அளித்து
மூட்டிய தீபம்

யாரிந்த மாவீரர்கள்

மனித நேயத்தின்
மகத்துமாக்கள்
யாரிந்த மாவீரர்கள்

விடியும் வரை

அதிகம்

தேடல்