சாவதற்கே வாழும் கறுப்பு மேகங்களே
தியாகம் செய்து
மழையென பெய்து ஓய்கிறீர்;கள்
எங்கள் கண்களின் குளங்களை நிரப்பி விட்டு..
நரக வீதிகளில்
” கறுப்பு மேகங்கள் ”
நாளெண்ணிக் கிடந்தோம்.
நாவுக்கடியில் சொற்களைப் புதைத்து
உயிர் மட்டும் சுமந்து
உலவித் திரிந்தோம்.
எங்கள் விதி செதுக்கும்
உங்கள் உயிர்களை
உளியாக்கினீர்கள்.
தமிழின விடிவின்
ஒளியாகினீர்கள்.
உரிமைக் குரலில்
ஒலியாகினீர்கள்
ஊமை உதடுகள் உச்சரிக்கும்
புதிய மொழியாகினீர்கள்.
கனத்தினை கரத்திலும்
உரத்தினை சிரத்திலும் கொண்ட புலியாகினீர்கள்.
எம்
உயிர்ப் பயிர்கள் விளையும்
நிலமாகினீர்கள்.
தமிழ் மரம் முளைக்க மீண்டும்
விதையாகினீர்கள்.
எங்கள் தலை நிமிர
உங்கள் நிலை மறந்தீர்கள்.
காற்றும் நுழையாத
சிங்கக் குகைகளை சிதற வைத்தீர்கள்.
வேற்று கிரகம் வரை
உங்கள் புகழ் மணக்கும்.
தூற்றும் துவேச வாய் கூட
பல சமயம் சொல் மறந்து பிளந்திருக்கும்.
நேற்று வரை புயல் அடித்தது காற்றுக்கு கூட தெரியும்..
கூற்றுவனை கட்டி யணைத்து
வரவேற்கும் துணிவை
பறை சாற்றிக் கொண்டு திரியும்..
புலி யென்றால் படையும் நடுங்குமென
புதுச் சரித்திரம்
படைத்தீர்கள்.
வெற்றியும்
வீரமரணமும்
ஒன்றானது உங்களில்த் தான்.
வெந்த தணலில்
வீர வேட்கை கொண்டு
செங்குருதி குளிக்கும்
மறத்தமிழர் நாமென்று
மார் தட்ட வைத்தீர்கள்..
உங்கள் மூச்சை
சுவாசிக்கும் காற்றும்
புயலாகும்..
ஓவ்வொரு மூச்சுக்கும் ஓராயிரம்
அர்த்தங்கள்
உங்கள் உணர்வின்
உயரம் அளந்தால்..
வானம் கூட உற்றேப்பார்க்கும்..
வென்று முடித்து
ஊமையாய்
ஊறங்குபவை
கல்லறைகள் அல்ல..
சில்லறைப் படைகளை
சிதற வைத்து தம்
உயிர் நீத்த தெய்வங்கள்
உறையும்
கருவறைகள்?.
ஆக்கம் : தஷந்தி நிரேக்கா
அதிகம்
-
தமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு - எங்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு கடல் சூழ்ந்த யாழ்பாணம் படகு போல் இருக்கும்! கரை மணலில் நண்டு ஏதே...
-
என்னடா தோழா செருக்களமா? அட எங்கேயடா? எனக் கூவி சொன்னவன் நின்ற மலை முடியின்மிசை துள்ளி அவாவுடன் தாவி என்னிரு கண்கள் எதிரினிலே தொலை இடத...
-
தமிழே! உயிரே! வணக்கம்! தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்! அமிழ்தே! நீ இல்லை என்றால் அத்தனையும் வாழ்வில் கசக்கும்! புளிக்கும்! தமிழே!...
-
தேனைப் பொழிந்தும் கணிகள் சொரிந்தும் செங்கரும்பைப் பிழிந்தும் ஆநெய் கறுவாஏலம் கலந்தும் அமுதாய்த் தமிழ்ப் புலவன் ஊனை உயிரை உருக்கும் தமி...
-
முடங்கி வளைந்த முதுகே! நிமிர்வாய்! நடுங்கிக் கிடந்த நாட்கள் தொலைந்தன! காய்ந்த தமிழன் கண்ணை விழித்தான்! தேய்ந்த வீரம் திரும்பி வந்தது! நி...
-
முடியோடு முன்னாளில் மூவேந்தர் புகழோடு முரசி னோடு கொடியோடு மாற்றார்முன் குனியாத மார்போடு கொற்றத் தோடு படையோடு தனியான பண்போடு பிறநாடு...
-
(02-11-2007 வெள்ளி காலை 06.10 மணியளவில் சிறீலங்கா அரச பயங்கரவாதிகளின் வான்குண்டு வீச்சு தாக்குதலில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்...
-
தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை! தலைமீது சுமக்கின்றான் அடிமை என்னும் சொல்லை! தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை! எதிரியைத் தலைவனாய் எண்ணுக...
No comments:
Write comments