தமிழீழம் மலர்ந்து
தன் மானத்துடன் வாழவே
தானத் தலைவன்
தரணியில் அமைத்தான் புலிப்படை
எம் இனத்தை வதை செய்த
பாதகரைத் திவசம் செய்ய
தலைவன் வழியினில் உதித்த
உயிர்ப் பூக்கள் நீங்கள்.
வானத்திலிருந்து விமானங்கள்
குண்டு மழை பொழிந்தாலும்
அந்நியப் படைகள்
ஆயிர மாயிரமாய் வந்தாலும்
சிரிக்கின்ற முகத்துடன்
சிட்டாகப் பறந்து சென்று
தேடிவந்த பகை விரட்டியடித்து
பூரித்து நிற்பதே
உங்களின் இலக்கு
பார் முழுவதும் வியக்கும்
படைப் பலத்தைப் பெற்றீர்கள்
களத்தினில் எதிரிகளைக் கொன்று
காலனை உம்மிடம் அழைத்தீர்கள்
உங்கள் குருதி
உறைந்த தமிழ்மண்ணை
உயிராய் நேசிப்போம்
தமிழ் உயிர்ப் பூக்கள் என்றும்
எம் இதயத்தில் பூத்துக்குலுங்கும்.
உயிர்ப்பூக்களின் பாதம்
படிந்த தேசம்
இன்று போர்மேகம்
அகன்று நின்றாலும்
அதிகார சிங்கள
ஆட்சியாளர்களே ! இனியும்
உமக்காய்ப் பனிவோமென
ஓரு போதும் நினைக்காதே
பல்லாயிரம் உயிர்ப் பூக்களின்
பாதம் தொழுது
வேங்கையாப் பாய்வோம்
தமிழ் மண்ணின் விடியலுக்காய்.
உயிர்ப் பூக்கள்
அதிகம்
-
தமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு - எங்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு கடல் சூழ்ந்த யாழ்பாணம் படகு போல் இருக்கும்! கரை மணலில் நண்டு ஏதே...
-
என்னடா தோழா செருக்களமா? அட எங்கேயடா? எனக் கூவி சொன்னவன் நின்ற மலை முடியின்மிசை துள்ளி அவாவுடன் தாவி என்னிரு கண்கள் எதிரினிலே தொலை இடத...
-
தமிழே! உயிரே! வணக்கம்! தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்! அமிழ்தே! நீ இல்லை என்றால் அத்தனையும் வாழ்வில் கசக்கும்! புளிக்கும்! தமிழே!...
-
தேனைப் பொழிந்தும் கணிகள் சொரிந்தும் செங்கரும்பைப் பிழிந்தும் ஆநெய் கறுவாஏலம் கலந்தும் அமுதாய்த் தமிழ்ப் புலவன் ஊனை உயிரை உருக்கும் தமி...
-
முடங்கி வளைந்த முதுகே! நிமிர்வாய்! நடுங்கிக் கிடந்த நாட்கள் தொலைந்தன! காய்ந்த தமிழன் கண்ணை விழித்தான்! தேய்ந்த வீரம் திரும்பி வந்தது! நி...
-
முடியோடு முன்னாளில் மூவேந்தர் புகழோடு முரசி னோடு கொடியோடு மாற்றார்முன் குனியாத மார்போடு கொற்றத் தோடு படையோடு தனியான பண்போடு பிறநாடு...
-
(02-11-2007 வெள்ளி காலை 06.10 மணியளவில் சிறீலங்கா அரச பயங்கரவாதிகளின் வான்குண்டு வீச்சு தாக்குதலில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்...
-
தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை! தலைமீது சுமக்கின்றான் அடிமை என்னும் சொல்லை! தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை! எதிரியைத் தலைவனாய் எண்ணுக...
No comments:
Write comments