வானத்தில் நட்சத்திரங்களை எண்ணிய − நாம்
இன்று யுத்தத்தின் கோரப் பிடியில் சிக்குண்டு
உயிர் மடிந்த பச்சிளம் குழந்தைகளினது
உடல்களை எண்ணுகையில் ஆயிரம் மலைகளை
மனதில் சுமப்பதாய் தாங்க முடியா பாரம்....
நேற்று வெண்ணிலாவைக் காட்டி சோறு ஊட்டிய
பையனை இன்று உயிரற்ற உடலைப் பார்த்து
துடி துடித்து கதறும் தாயின் துக்கத்தில் பங்கு
கொள்ளும் பொருட்டு இயற்கையும் மழையாய்
மாறி கண்ணீர் மழை பொழிந்தாள்....
பச்சைப் பசேலென்று கண்ணுக் கெட்டிய தூரம்
வரை தன் பசுமையால் கண்ணைக் கட்டிப்
போட்டு அழகு ராஜ்ஜியம் செய்து வந்த
மரங்கள் இன்று பறவை போல் இறக்கை
விரித்து வந்த விமானத்தின் மூலம் பொழியப்பட்ட
குண்டு மழையினால் பட்ட மரங்களாய் காட்சியளித்து.......
விடியும் ஒவ்வொரு பொழுதும் எமனுக்கு
கொண்டாட்டம்..பசிப்பிணியைப் போக்க மனித உயிரை
காவு கொண்டன ஆயுதங்கள்.....
ஆயுதங்களைப் தங்கமலைக் குவியலாய்
வாங்கி வாங்கி குவித்து பசியாலும்
யுத்தத்தாலும் கோரமாய் மரண தண்டனை
வழங்கியது அரசாங்கம்....
தீருமா இந்த யுத்தம்..
போக்குமா எம் அச்சத்தை...
துளிர்க்குமா பட்ட மரங்கள்..
நிலை நாட்டுமா வாழ்வில்
சந்தோஷத்தை இனிப் பிறக்கும்
சமுதாயமாவது யுத்த தாண்டவத்தைக்
காணாமல் பசுமையைக் காணட்டும்
வேண்டாம் இந்த யுத்தம் வளர்ப்போம்
சமத்துவத்தை......
தீருமா யுத்தம்
அதிகம்
-
தமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு - எங்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு கடல் சூழ்ந்த யாழ்பாணம் படகு போல் இருக்கும்! கரை மணலில் நண்டு ஏதே...
-
என்னடா தோழா செருக்களமா? அட எங்கேயடா? எனக் கூவி சொன்னவன் நின்ற மலை முடியின்மிசை துள்ளி அவாவுடன் தாவி என்னிரு கண்கள் எதிரினிலே தொலை இடத...
-
தமிழே! உயிரே! வணக்கம்! தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்! அமிழ்தே! நீ இல்லை என்றால் அத்தனையும் வாழ்வில் கசக்கும்! புளிக்கும்! தமிழே!...
-
தேனைப் பொழிந்தும் கணிகள் சொரிந்தும் செங்கரும்பைப் பிழிந்தும் ஆநெய் கறுவாஏலம் கலந்தும் அமுதாய்த் தமிழ்ப் புலவன் ஊனை உயிரை உருக்கும் தமி...
-
முடங்கி வளைந்த முதுகே! நிமிர்வாய்! நடுங்கிக் கிடந்த நாட்கள் தொலைந்தன! காய்ந்த தமிழன் கண்ணை விழித்தான்! தேய்ந்த வீரம் திரும்பி வந்தது! நி...
-
முடியோடு முன்னாளில் மூவேந்தர் புகழோடு முரசி னோடு கொடியோடு மாற்றார்முன் குனியாத மார்போடு கொற்றத் தோடு படையோடு தனியான பண்போடு பிறநாடு...
-
(02-11-2007 வெள்ளி காலை 06.10 மணியளவில் சிறீலங்கா அரச பயங்கரவாதிகளின் வான்குண்டு வீச்சு தாக்குதலில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்...
-
தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை! தலைமீது சுமக்கின்றான் அடிமை என்னும் சொல்லை! தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை! எதிரியைத் தலைவனாய் எண்ணுக...
No comments:
Write comments