அன்றொரு நாள்
ஆகாயத்திலிருந்து
அரிசியும் மண்ணெண்ணெயும்
ஆகா வந்துவிட்டார்கள்
கொண்டாடினோம்
குதூகலித்தோம்
குட்டி கரணமடித்தோம்
வந்து லீழ்ந்தது எமது
வாய்க்கரிசியென்றும்
மண்ணெண்ணெய் எம்
மண்ணை கொழுத்த
என்று தெரியாமல்
வந்தோரை வரவேற்று
மாலைகள் மரியாதைகள்
ஒருவன் ஏதோ சென்னான்
ஓன்றும்புரியவில்லை
ஒருவர் மெழி யெர்த்தார்
கவலை வேண்டாம்
காப்பாற்றவந்துள்ளோம்
நன்றாய் உங்களை
பார்த்து கொள்வோம்
கைதட்டினோம்
பின்னர் தெரிந்தது
பார்த்து பார்த்து
கொன்றபோது
மொழிபெயர்ப்பு
பிழையென்று
தட்டிய கைகள்
கட்டிவீதியெங்கும்
விலங்குகள்போல்
கட்டிதூக்கியே
கோழிபோல்
உயிருடன் உரிக்கப்பட்டவர்
எத்தனை
அவர்களின்
காமக்கழிவுகழை
வெளியேற்ற
கழிவறைகளாய் போன
எம்மவர் எத்தனை
காணாமல் போனவர்
எத்தனை.
என்ன பார்க்கிறீர்கள்
உங்கள் கேள்வி
சிங்களவன் இத்தனையும்
செய்யவில்லையா??
செய்தான்
அவன் எம்எதிரி
அப்படித்தான்
செய்வான்
ஆனால்
நீ.....?
No comments:
Write comments