சந்தனப் பேழையில் செல்பவரே
நீழ்துயில் ஏனோ கொள்ளுகிறீர்
நித்தம் விழித் எங்கள்
தேசத்தை காத்தவர் நீங்கள்
நிசப்தமாகவா தூங்குகிறீர்
காலை விடிந்ததும்
கார்த்திகை மேகங்கள் சூழும்
இங்கே கார்த்திகை பூக்களும் பூக்கும்
மாலையில் மணியோசை கேட்க்கும்
கல்லறை எங்கும் தென்றல் வீசும்
துயிலெழும் வீரர்கள் கண்ணெதிரே தோன்றும்
நெஞ்சம் நெகிழ்ந்து
கண்கள் பனிக்கும் கடலாகும் கண்ணீரில்
கார்த்திகை மழை வெள்ளம் தோற்கும்
அழுகுரல்கள் வரம்பு மீறும்
உங்கள் நினைவதை தாண்டியே பாயும்
காட்சிகள் ஆயிரம் நிகழும்
இது .. குருதி உறையும் கணபொழுதின்
உலக அதிசயம் இதை
உணர எமக்கு உரிமைப் போரின்
வகிப்பு அவசியம்
உங்கள் மூச்சை சுமக்கும்
காற்று வந்து வீசும்
தேசமெங்கும் உங்கள் பெயர் பேசும்
கல்லறையின் கதைகள் பல சொல்லும்
காதலுடன் கண்ணீரையும் சிந்தும்
எங்கள் தேசியக் கொடியின் வீச்சு
மாவீரரே உங்களின் உயிர் மூச்சு
தாயகக்கனவுடன் காற்றெனக் கலந்தீர்
தமிழ் தாயகம் சேர்த்திட
தரணியில் பிறந்தீர்
வேருடன் விழுதுகள் எழும்
வீரனே உன் வீரம் கதை பேசும்
நேற்றைய நாளிகை நினைவினில்
நீ சுமந்த கனவுகள் மனதினில்
தோற்றது இல்லை தமிழ் மறவரினம்
ஏற்றுவோம் கொடியை தினம் .
” சி . வடிவேற்கரசன் “
‘தமிழீழம்’
அதிகம்
-
தமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு - எங்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு கடல் சூழ்ந்த யாழ்பாணம் படகு போல் இருக்கும்! கரை மணலில் நண்டு ஏதே...
-
என்னடா தோழா செருக்களமா? அட எங்கேயடா? எனக் கூவி சொன்னவன் நின்ற மலை முடியின்மிசை துள்ளி அவாவுடன் தாவி என்னிரு கண்கள் எதிரினிலே தொலை இடத...
-
தமிழே! உயிரே! வணக்கம்! தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்! அமிழ்தே! நீ இல்லை என்றால் அத்தனையும் வாழ்வில் கசக்கும்! புளிக்கும்! தமிழே!...
-
தேனைப் பொழிந்தும் கணிகள் சொரிந்தும் செங்கரும்பைப் பிழிந்தும் ஆநெய் கறுவாஏலம் கலந்தும் அமுதாய்த் தமிழ்ப் புலவன் ஊனை உயிரை உருக்கும் தமி...
-
முடங்கி வளைந்த முதுகே! நிமிர்வாய்! நடுங்கிக் கிடந்த நாட்கள் தொலைந்தன! காய்ந்த தமிழன் கண்ணை விழித்தான்! தேய்ந்த வீரம் திரும்பி வந்தது! நி...
-
முடியோடு முன்னாளில் மூவேந்தர் புகழோடு முரசி னோடு கொடியோடு மாற்றார்முன் குனியாத மார்போடு கொற்றத் தோடு படையோடு தனியான பண்போடு பிறநாடு...
-
(02-11-2007 வெள்ளி காலை 06.10 மணியளவில் சிறீலங்கா அரச பயங்கரவாதிகளின் வான்குண்டு வீச்சு தாக்குதலில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்...
-
தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை! தலைமீது சுமக்கின்றான் அடிமை என்னும் சொல்லை! தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை! எதிரியைத் தலைவனாய் எண்ணுக...
No comments:
Write comments