Showing posts with label Lanka Sri. Show all posts
Showing posts with label Lanka Sri. Show all posts

போர் முற்றம் நின்று பூங்கொத்து ஏந்திய புன்னகை மன்னவனே!


போர் முற்றம் நின்று பூங்கொத்து ஏந்திய புன்னகை மன்னவனே!
தூர் முட்டும் தீயின் ஓரத்தில் வீசிய சில்லென்ற நதிக்காற்றே!
ஆர் சுற்றம் பிரித்தறியா ஈழத்தின் உறவான இன்முகத் தமிழ் எழிலே!
பார் சுற்றி தாய் முற்றக் கதை சொல்லிப் பயணித்த பண்புநிறை தமிழ்செல்வா!

கத்திக் கதறுது மனது

கத்திக் கதறுது மனது-நீ
இன்னும் இருக்கிறாய் என்று
புழுதி புரண்டழுது.

அலையொன்று அடித்தோய்ந்ததம்மா


தேசக்காற்றே அனல் வீசியதேன் - எம்
தேவனையும் நீ பறித்ததேன்
தேசத்தின் குரல் ஓயந்து நாம்
திகைத்து நின்றோம் - இன்று

பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம்.


தள்ளாத வயதில் ஊண்டும் தடியை - முதுமை
இல்லாத வயதில் ஊண்டியவன்.
தள்ளாடி சாகத் துடிப்போர் உலகில் - களத்தில்
மல்லாடி சாகத் துணிந்தவன்.

இதயம் கிடந்து அழுகிறதே


ஈழம் வரும் வேளையென்றே
நினைத்திருந்தோம்..அண்ணா...
பேரிடியாய்.. உன் பிரிவை
உள்வாங்கிக்கொண்டோம்..

புலி மங்கை மாலினி நினைவுக் கவிதை...


பாரதி
நீ மீண்டும்
பிறப்பது
சரி!

விடியும் வரை

அதிகம்

தேடல்