கத்திக் கதறுது மனது

 

கத்திக் கதறுது மனது-நீ
இன்னும் இருக்கிறாய் என்று
புழுதி புரண்டழுது.


தெருவெல்லாம் இழுத்து வந்தேன் - என்
இதயத்தை
தேம்பியழும் அதை எங்கு மறைக்க ?
அண்ணா அவசரப்பட்டயோ - நாம் அங்கீகாரம்
உலகில்லல்லவா கேட்டோம் - நீ
விண்ணிற்கு சென்றதேன் ?

இனி அந்தச்சிரிப்பை எங்கு நாம் தேட ?
உன் விழியில்லாத் தேசம் இருண்டல்லவா கிடக்கு !
தலைவருக்கு தோள் கொடுக்க யாரைத் தேடுவோம் ?
நீயில்லாத செய்தி - வந்திருக்கவே வேண்டாம் !

No comments:
Write comments

விடியும் வரை

அதிகம்

தேடல்