தள்ளாத வயதில் ஊண்டும் தடியை - முதுமை
இல்லாத வயதில் ஊண்டியவன்.
தள்ளாடி சாகத் துடிப்போர் உலகில் - களத்தில்
மல்லாடி சாகத் துணிந்தவன்.
அமைதி விளக்கு அணைந்த உலகில் - அமைதி
காண நடந்த வீரன்.
குண்டு விழாத தேசம் காண - விமான
குண்டேந்தி விழுந்த வேங்கை.
நால்வர் வேண்டும் தூக்கி செல்ல - இவனோ
ஐவரோடு சேர்ந்து நடந்தவன்.
காந்திக்குப் பின் கைத்தடி ஏந்தி - அமைதிக்கு
பாடுபட்ட அழிவில்லா வேங்கை.
பேசத்தெரியா சிங்கள அரசுடன் பேசுவதில் - இனி
பயனில்லை என்று கண்டவன்.
பேச்சுக்கள் முடிந்துவிட்ட செய்தியை உலகிற்கு - தன்
பேச்சற்ற முடிவால் சொன்னவன்.
அவன் பெயரைச் சொன்னால் எதிரியின் - வாய்க்குள்ளும்
தமிழ் நுழைந்து போராடும்.
தமிழீழம் மலரும் நாளில் இவனே - அதன்
முன்னுள்ள தமிழாய் நிற்பான்.
கண்ணீர் சிந்தாத தலைவரும் உன்னால் - கண்களில்
பனித்துளி கசியக் கண்டார்.
விண்நீர் உலகம் திரண்டு தடுத்தாலும் - தயங்காது
தமிழீழம் காண்போம் தமிழ்செல்வ..!
ஈழத்து மண்ணின் இணையில்லா பூவே - தமிழுக்கு
வாசம் தந்த வரலாறே !
கரைபுரண்டு ஓடும் காலப் பெருநதியும் - உன்
காலடியை வணங்கியே ஓடும்.
தமிழ்த்தாய் மடிக்கு அழகு தந்தவனே - தலைவரின்
அன்பைத் தாங்கிச் சென்றவனே.
விடிகாலைப் பொழுதில் புறப்பட்டு போனவனே - விடிகிற
செய்தியை சொல்லாமல் சொன்னவனே.
இருபத்தியொரு கரும் புலிகள் அணிவகுத்து - அழைக்க
அவனி துறந்த அரியவனே..
கழுத்திலுள்ள வெற்றி மாலையை கழற்றி - உன்
காலடியில் வைத்து நிமிர்கிறோம்.
நாளை வருகிறது வெற்றிச் செய்தி - அதற்கு
முன் இதோ வீரவணக்கம
No comments:
Write comments