ஈழம் வரும் வேளையென்றே
நினைத்திருந்தோம்..அண்ணா...
பேரிடியாய்.. உன் பிரிவை
உள்வாங்கிக்கொண்டோம்..
வேதனையில்.. விழுந்த
நெஞ்சங்களை காணுகின்றோம்..
தமிழ்ச் செல்வன் அண்ணா
உன்னை நினைந்து விழி ததும்புகிறோம்..
பூத்திருக்கும் புன்னகையில்
ஒளி தருவாய்..நம்
தலைவரவர் கரமிணைந்து
செயல் புரிவாய்..
நெஞ்சமெல்லாம் வாடி நிற்க
எங்கு சென்றாயோ..
நேசமெல்லாம் கண்டு கொள்ள
ஒளிந்து கொண்டாயோ..
அழுதுவிடவேண்டாமென்று..
விழிகளிடம் சொன்னேன்..
இதயம் கிடந்து அழுகிறதே
யாரிடம் சொல்வேன்..
புலிகள் பலம் குறையுமென்று.
எதிரிகள் நகைப்பார்....
உன்னை விதைத்த இடம்..
செழிக்கும் அதை வீணர்கள் அறியார்..
வீரப்புலித் தலைவரரவர்..
சோர்வது இல்லை..
அவர் கரங்களிலே..
உறுதி சேர்ப்போம்..
தூங்கிடு மெல்ல...
அண்ணா தூங்கிடு மெல்ல..
No comments:
Write comments