தலைவர் பிரபாகரன் கார்த்திகை 27 உரை! (prabhakaran speech whatsapp status)

 


தலைவர் பிரபாகரன் அவர்களின் கார்த்திகை 27 மாவீரர் நாள் உரை வீடியோ வாட்ஸ் அப் ஸ்டேடஸ்





(prabhakaran speech whatsapp status / velupillai prabhakaran whatsapp status / velupillai prabhakaran birthday whatsapp status / captain prabhakaran whatsapp status / prabhakaran status video)

தலைவன் வருவான்டா தமிழா..

ராஜா ராஜா சோழன் கொடுத்தாண்ட புலிக்கொடி 
தொடுத்தான்ர என் அண்ணன் ஈழத்தில் சோழப்போரை 
என் அண்ணன் மறுபடியும் வருவான்ரா 
தமிழ் ஈழம் வென்று தருவான்ரா 

தளராதே தமிழா தளராதே 
தமிழீழத்தில் புலிக்கொடி பறக்கும் தளராதே 
தமிழா முப்படையும் வரும் 
மும் முனையிலும் மோதும் 
பண்டாரவன்னியன் ஆண்டவன்னி மண்ணடா 
என் அண்ணன் ஈழமண்ணில் எதிரிகள் யாவரையும் 
விடப்போவதில்லை 

எதிரியின் உடல்கள் யாவும் வந்து குவியுமடா 
வன்னிமண்ணிலே தளராதே தமிழா தளராதே 
நீரில் எரியும் திபமடா வற்றாப்பளை தீயில் எரிவதா 
அண்ணன் விடப் போவதில்லையடா 
இங்கு எங்கே சிங்களவனை ஆழவிட்டது யாரடா 

அண்ணன் படை விரட்டுமடா 
இங்கு தமிழன் ஆளுவானடா தளராதே தமிழா தளராதே 
அண்ணன் சொல்லில் அண்ணன் படை தமிழீழம் படைக்குமடா 
காலம் வரும் நல்ல நேரம் வரும் 
கண்ணிமைக்கும் நேரத்தில் அண்ணன் படை பாயும் 
எதிரி கண்ணில் ஈழமண்ணை துவுமாடா 
தளராதே தமிழா தளராதே 

அண்ணன் படை தமிழீழம் வென்று தரும் 
மகிந்தாவின் மானம் தெருவெங்கும் நாய் இழுக்கும் 
தமிழனின் வீரம் புலிக்கொடியாய் வானில் பறக்குமடா 
சோனியாவின் துண்டு சாணியாக மாறும் 
தளராதே தமிழா 
அண்ணனின் கையில் இன்னும் வீரமுண்டு 
தளராதே தமிழா தளராதே 
தமிழா தளராதே தமிழா 

விதைத்து போயிருகிறர்கள்

தமிழ்த்தாயே
மரம் தாங்கும் மண்ணாய்
இலை தாங்கும் மரமாய்

காய் தாங்கும் கொடியாய்
சேய் தாங்கும் தாயாய்

நீயே தாய்
நாங்கள் சேய்

ஈழத்தின் முடிவிலா
கொலைகள் கண்டு
முடியாமலே போகிறது
உன் இரங்கற்பா.. !

ஈழத்திற்காக இறந்தவர்கள்
எல்லோரும்
சிதை சிதைந்து போகவில்லை
விதை விதைத்து போயிருகிறர்கள்...!

ஈழத்துக்கு இதுவே இறுதி அஞ்சலி - பூவிதழ்


ஈழத்தமிழா ...

உன்னை நினைக்கும்போதெல்லாம்
துக்கம்- துயரம்- துரோகம் --
தோட்ட விழுங்கிய துப்பாக்கியாய் ! தொண்டைக்குழிவரை - இன்று வெடித்துச் சிதறியது வார்த்தைகளாய் !

போர்குற்றமா ?, மனிதஉரிமை மீறலா ? இனப்படுகொலையா ? ????
ஊடகங்கள் நடத்தும் நாடகத்தில்
விவாதம் மட்டுமே செய்தோம்
வேறென்ன செய்தோம் ???

முள்ளிவாய்க்கால் முற்றத்தோடு முடித்துக்கொண்ட நம் உறவை திரும்பிப் பார்க்கிறோம் தேர்தலுக்காக !

உன் வாழ்கையை வாக்காக்க துடிக்கும் வர்த்தகத்தில் விலைபோகுமோ உன் வரலாறு ?

புயலொன்று வந்தால் பூங்கொடிகள் அறுபடும் !
போரொன்று வந்ததுமே அறுந்துபோனதோ - நம் தொப்புள்க்கொடி !
அறுத்தது அரசியலோ , அந்நியனோ
அகதிகளாய் , அனாதைகளாய் , அடிமைகளாய் சொந்தமண்ணில் சுவடுகளாய் - தமிழா !
இமயத்தில் ஒருநாள் பறந்ததும் உன்கொடியே
இலங்கையில் பறக்குது இன்று உன் கோவணமே !

முள்ளிவாய்க்காளில் மூச்சிரைத்த இறுதிமூச்சின் சூளுரைகள் யாமறிவோம் !
அதை சமன் செய்யும் சாத்தியம் யாரறிவார் ?
சூத்திரம் பலகண்ட சரித்திரம் எமக்குண்டு !
ஆயுதம் கொடுத்து ஆழித்த பெருமை யார்க்குண்டு ? தமிழா ?


தனிஈழம் கேட்டதில் உன் தவறென்ன ?
பொதுவாய் கிடைத்தது புதைகுழி மட்டுமே !

இனம் அழிந்த மரண செய்தியை செரித்து
துக்கம் துடைத்து வாழும் -தமிழா
தலைமுறைகள் தணிக்கை செய்யும் உன்வரலாற்றை - அதில் தனித்துவிடப்படுவாய் நீ தமிழன் சுயசரிதை சுயநலமாய் போனதோ ?

புலம் பெயர்ந்த தமிழன் பெறும் பரிசுக்கு மார்தட்டும் தமிழா - உன் காலடியில் கட்டப்பட்ட எங்கள் கல்லறைக்கு கண்ணீரஞ்சலி மட்டுமா ?

இந்தியர்களே எங்களை புறக்கணித்தார்கள் ஏன் ?
ஈழம் இன்னும் தமிழ் பேசுவதாலோ ?

எதிரியின் தோட்டாக்களுக்கு இதயத்தை பரிசளித்த என் இனமே ... இதுவரை என்ன செய்தோம் உங்களுக்கு ?

மரணம் சிலகாலம் எங்களை மறக்கலாம் ஆனால் உங்கள் மரணம் எங்களை ஒரு காலமும் மன்னிக்காது !

இதுவரை என்ன செய்தோம் இவர்களுக்கு
எழுதுவதற்கு மட்டும் நாம் என்ன - எழுத்தாணிகளா ?

********************************************************************
இதுவே ஈழத்துக்கு நாம் எழுதும் இறுதி அஞ்சலியக இருக்கட்டும் இனி எழுத்தில் எழுதுவதென்றால் அது தனி ஈழம் பிறந்ததற்கு தமிழன்னை பாடும் தாலாட்டாக மட்டும் இருக்கட்டும் -
இனி எழுத்தில் வேண்டாம் - எண்ணத்தில் - செயலில் - ஏதாவது செய்வோம் - ** பூவிதழ் ***

சமையுமா ஈழம்?


ஈழத்தின் இமயம் தொட்டு
வாழத்தான் நினைத்தோம்
காலத்தின் சமயம் பார்த்து
ஆளத்தான் இருந்தோம்

ஆள்வார் நம் "சமயம்" பார்த்து
போர்வாளை ஏந்தினர்
பௌத்த சமயம் இல்லாத
எம் "சமயம்" பார்த்து

பயங்கரவாத முத்திரையில்
எம்முகத்தை திரையிட்டு
பயன்தராத நித்திரையில்
கனவுக்காட்சி திரையிட்டு

என்தாயின் மாரறுத்துக்
காமப்பசி தீர்த்துக்கொண்டாய்
பாலுக்குப்பதில் இரத்தத்தால்
எந்தன்பசி தீர்த்தாளவள்

அப்பாவின் சிரசின் மீது
துப்பாக்கி உரசிச் சுட்டாய்
அண்ணாவின் முன்னான் நரம்பை
சின்னாபின்னம் ஆக்கிவிட்டாய்

கன்னிக் கழியாத்
தங்கை என்னை
எண்ணித் தவியாய்த்
தவிக்க விட்டாய்

என்னினத்தின் குருதிச்சூட்டை
துப்பாக்கியால் அளந்தவன்
உன்னினத்தின் இறுதிஏட்டை
பாக்கியின்றி பிளந்திடுவோம்!

விழுதுகளில் வேரமைத்து
இனங்காத்த தமிழன்
பழுதுகளை சீரமைத்து
இனங்காட்ட வருவானா?

கொன்று குவித்து விட்டதால்
வென்று ஜெயித்து விட்டீரா?
இறப்புக்களின் பிறப்பில்தான்
இருப்புக்கொள்ளும் தமிழினம்! 

எமது போராட்டம் தொடரும்

 

உனக்காக தானே எம் உயிர்
தந்தோமே வெல்லும் வரையும்
எமது போராட்டம் தொடரும்
செங்குருதி வழியில் சென்று

தேச விடுதலைக்காய்

 


தேச விடுதலைக்காய்
எம் உயிரும் பிரியும்
ஈழத்தில் கொடி பறக்கும் நேரம்
வானமும் மழையை

நாம் கருவுற்ற தேசம்

 


நாம் கருவுற்ற தேசம்
கண்ணீரில் மூழ்கியது
மலர்களின் வாசனை எங்கே
கந்தக வாசனையே இங்கே

புலியென எழுந்து வந்தோம்

 



விழிகளில் கனல் கொண்டு 
வீரர்கள் அணிநடை தொடரும் 
வெஞ்சமரில் களமாடி பகைவர் 
உடல்கள் மண்ணோடு சாயும்

எங்கள் பயணங்கள் தொடரும்

 

எங்கள் பயணங்கள் தொடரும்
பகைவனே உன் தேசம்
தீ பற்றி எரியும்
பதுங்கிய புலிகள்

விடியும் வரை

அதிகம்

தேடல்