நாம் கருவுற்ற தேசம்

 



நாம் கருவுற்ற தேசம்
கண்ணீரில் மூழ்கியது
மலர்களின் வாசனை எங்கே
கந்தக வாசனையே இங்கே
காவி உடை புத்தனால்
இரத்த கரை படிந்து
போனது எம் தேசம்
பார்க்கும் இடங்கள் எல்லாம்
புதை குழிகளாய் பூத்தவுடன்
உதிர்ந்த மலர்களாய்
புன்னகையில்லா தேகமாய்
உதிர்ந்தது மரத்தின் இலைகள்
மீண்டும் துளிர் விடவில்லை
வாழ்விடம் தொலைத்த அகதியாய்
காடுகள் வாழும் மிருகங்கள் ஆனோம்
அழும் போது மட்டும் தொட்டிலை
ஆட்டி விடுவது போல் உள்ளது
உலகத்தின் நீதி ......

No comments:
Write comments

விடியும் வரை

அதிகம்

தேடல்