ஈழ வேந்தனுக்கு எம் இதய அஞ்சலி- வீர வணக்கம !


(02-11-2007 வெள்ளி காலை 06.10 மணியளவில் சிறீலங்கா அரச பயங்கரவாதிகளின் வான்குண்டு வீச்சு தாக்குதலில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவினை தழுவிய செய்தியறிந்து அந்நிமிடமே நான் தீட்டிய கண்ணீர் கவிதை- இன்றும் எம் மக்களின் மாறா அதே நிலை………!.)

நினைவில் இருக்க வேண்டிய நாள் மே18

முப்படையும் மூர்க்கம் காட்டி
முள்ளிவாய்க்காலுக்கு
முடிவுகட்டியதாய்
கொக்கரித்த நாளாம் இன்று…….!

விடியல்

இருள் திரை போர்த்திங்கு
நில மகள்
மாசுப்பாதங்கள் பதித்து

நெஞ்சமெல்லாம் நிறைந்தவரே

கார்த்திகைத் திங்கள்
கார்மழை மேகம் சூழ்ந்திருக்கும்
மாலைநேரம் எங்கள் தாயகத்தில்

நறுக்குகள் - இலக்கியம்

களத்தில்
நிற்கிறேன்...

என்
இலக்கியத்தில்
அழகில்லை
என்கிறாய்.

தோரணம்
கட்டும்
தொழிலோ
எனக்கு?

வாளில்
அழகு தேடாதே
கூர்மை பார்.

நறுக்குகள் - மனிதன்

இவன்
பசுவின் பாலைக்
கறந்தால்

"பசு பால் தரும்"
என்கிறான்.

காகம்
இவன் வடையை
எடுத்தால்

"காகம்
வடையைத் திருடிற்று"
என்கிறான்.

இப்படியாக
மனிதன்...

நறுக்குகள் - குப்பைத் தொட்டி

அலுவலகத்தில்
இருக்கிறவனுக்கு
இது -
குப்பைத் தொட்டி

குப்பை பொறுக்கி
வாழ்கிறவனுக்கு
இது -
அலுவலகம்.

நறுக்குகள் - மானம்

கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?

அவன்
கைகளை
வெட்டு.

கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே.

அம்மணமாகவே
போராடு.

நறுக்குகள் - ஏழ்மை

சதை பிடித்து
விடுகிறாள்

அழகு
நிலையத்தில்

எலும்புக் கைகளால்.

நறுக்குகள் - அறுவடை

சுவரொட்டியை

தின்ற கழுதை
கொழுத்தது.

பார்த்த கழுதை
புழுத்தது.

விடியும் வரை

அதிகம்

தேடல்