கார்த்திகைத் திங்கள்
கார்மழை மேகம் சூழ்ந்திருக்கும்
மாலைநேரம் எங்கள் தாயகத்தில்
ஊர்முழுதும் திரண்டு வந்து – உம்
அருகில் அணிவகுத்து நின்று,
நெய்விளக்கேற்றி உமை
நினைத்து நிற்க்கும் அந்த
நினைவழியா நாட்கள்,
நேற்றுப்போல் இருக்கிறதே
எங்கிருந்தோ வந்தவெதிரி
எங்கள் ஊர் புகுந்தவேளை
போட்டது போட்டபடி
எல்லாமும் இடிந்து
எங்கள் உறவுகளோடு
உயிரை மட்டும் இறுகப்பற்றி வந்தோம்.
ஏதிலியாய் வாழ்க்கை…
எவரிடமும் கையேந்தவில்லை நாம்
எதற்கும் கூட கலங்கவில்லை.
ஆனால்….?
உங்கள் கல்லறைகள் மட்டும்
எதிரியவன் காலடியில்
விட்டு வந்த காரணத்தால்
வருந்தினோம், வாய்விட்டழுதோம்
பெருகியது துயரத்துடன் கண்ணீரும் தான்.
வருடா வருடம் வருகின்ற
உம் திருநாளில் அருகிருக்க,
எம் நெஞ்சமெல்லாம் ஏங்கி
நெஞ்சுருகிப் போகிறதே.
தனிமையிலே உம்மை விட்டுவந்த
துயர் நினைந்து
நெஞ்சுருகிப் போகிறதே நெஞ்சமேல்லாம்.
1995ம் ஆண்டு வருடத்தில் வந்த
அந்த ஒக்டோபர் திங்கள் 30ஆம் நாள்,
தமிழர் தம் இதயமெல்லாம்
துயரத்தில் தோய்ந்த நாள்.
எதிரி ஊர் புகுந்த சேதி
எங்கள் காதினிலே வந்ததனால்
புறப்பட்டோம் ஊர் பிரிந்த.
கண்டி வீதி வழியாக செம்மநிதான் கடந்து,
கால்போன போக்கினிலே
நடைபிணங்கள் போல
நாம் நடந்த காட்சி
சொல்லில் வடித்திடத்தான் முடிந்திடுமா?
குஞ்சென்றும் மூப்பென்றும்
கூனென்றும் குருடென்றும்
பேதங்கள் ஏதுமின்றி,
துயர் சுமந்தோம் அந்நாளினிலே,
ஊரிழந்து வந்தவர் நாம்
திசைக் கொன்றாய்ப் பிரிந்தோம்.
வன்னியிலும் வளங்கொழிக்கும்
பிறநாடுகளிலும்
எங்குதான் இருந்தாலும்
எம் நினைவு தாயகத்தின் காவலர்கள்
உம்முடனே……..
எங்கிருக்கின்றோம்? என்பதல்ல
என்ன செய்கின்றோம்? என்பதுதான்
தமிழர் தம் கடப்பாடு.
தமிழர் தம் தலை நிமிர,
தாயகமும் கைசேர,
கரம் கொடுப்போம் நாமொன்றாய்,
மாவீரர் உம நினைவுடனே,
உமக்கென்று எதுவும் வேண்டாது
எமக்கென்று உம்முயிர் தந்தவரே
மறப்போமா உம்முகவரிகள்?
எங்கிருக்கின்றோம் என்பதல்ல
என்ன செய்கின்றோம் என்பதனை
நன்றாக உணர்ந்தவர்கள் நாம்
உறுதியாய் எமக்கொன்று தெரிகிறது.
ஊர்பிரிந்த உறவுகள் – நாம் ஊர் திரும்பும் நாள்
தூரத்தில் இல்லை.
– இரா.திருமாறன். (2001ம் ஆண்டு வரையப்பட்ட கவிதை)
அதிகம்
-
தமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு - எங்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு கடல் சூழ்ந்த யாழ்பாணம் படகு போல் இருக்கும்! கரை மணலில் நண்டு ஏதே...
-
என்னடா தோழா செருக்களமா? அட எங்கேயடா? எனக் கூவி சொன்னவன் நின்ற மலை முடியின்மிசை துள்ளி அவாவுடன் தாவி என்னிரு கண்கள் எதிரினிலே தொலை இடத...
-
தமிழே! உயிரே! வணக்கம்! தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்! அமிழ்தே! நீ இல்லை என்றால் அத்தனையும் வாழ்வில் கசக்கும்! புளிக்கும்! தமிழே!...
-
தேனைப் பொழிந்தும் கணிகள் சொரிந்தும் செங்கரும்பைப் பிழிந்தும் ஆநெய் கறுவாஏலம் கலந்தும் அமுதாய்த் தமிழ்ப் புலவன் ஊனை உயிரை உருக்கும் தமி...
-
முடங்கி வளைந்த முதுகே! நிமிர்வாய்! நடுங்கிக் கிடந்த நாட்கள் தொலைந்தன! காய்ந்த தமிழன் கண்ணை விழித்தான்! தேய்ந்த வீரம் திரும்பி வந்தது! நி...
-
முடியோடு முன்னாளில் மூவேந்தர் புகழோடு முரசி னோடு கொடியோடு மாற்றார்முன் குனியாத மார்போடு கொற்றத் தோடு படையோடு தனியான பண்போடு பிறநாடு...
-
(02-11-2007 வெள்ளி காலை 06.10 மணியளவில் சிறீலங்கா அரச பயங்கரவாதிகளின் வான்குண்டு வீச்சு தாக்குதலில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்...
-
தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை! தலைமீது சுமக்கின்றான் அடிமை என்னும் சொல்லை! தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை! எதிரியைத் தலைவனாய் எண்ணுக...
No comments:
Write comments