Showing posts with label காசி ஆனந்தன் கவிதைகள். Show all posts
Showing posts with label காசி ஆனந்தன் கவிதைகள். Show all posts

நறுக்குகள் - இலக்கியம்

களத்தில்
நிற்கிறேன்...

என்
இலக்கியத்தில்
அழகில்லை
என்கிறாய்.

தோரணம்
கட்டும்
தொழிலோ
எனக்கு?

வாளில்
அழகு தேடாதே
கூர்மை பார்.

நறுக்குகள் - மனிதன்

இவன்
பசுவின் பாலைக்
கறந்தால்

"பசு பால் தரும்"
என்கிறான்.

காகம்
இவன் வடையை
எடுத்தால்

"காகம்
வடையைத் திருடிற்று"
என்கிறான்.

இப்படியாக
மனிதன்...

நறுக்குகள் - குப்பைத் தொட்டி

அலுவலகத்தில்
இருக்கிறவனுக்கு
இது -
குப்பைத் தொட்டி

குப்பை பொறுக்கி
வாழ்கிறவனுக்கு
இது -
அலுவலகம்.

நறுக்குகள் - மானம்

கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?

அவன்
கைகளை
வெட்டு.

கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே.

அம்மணமாகவே
போராடு.

நறுக்குகள் - ஏழ்மை

சதை பிடித்து
விடுகிறாள்

அழகு
நிலையத்தில்

எலும்புக் கைகளால்.

நறுக்குகள் - அறுவடை

சுவரொட்டியை

தின்ற கழுதை
கொழுத்தது.

பார்த்த கழுதை
புழுத்தது.

விடியும் வரை

அதிகம்

தேடல்