கார்த்திகை வீரர்

 

காரிருள் சூழ்ந்து
கண்ணீர் சிந்திட
கரங்களை இணைத்து
காட்டினில் புகுந்து

கானகம் கடந்து
காற்றென விரைந்து
கழுத்தினில் மாலைகள்
நஞ்சென அணிந்து

கரும் போலியென
எழுந்து
கடமை பெரிதென
உணர்ந்து
உயிர் பூவாய்
மடிந்து
உறவுக்காய் மரணித்த

கார்த்திகை வீரர்கள்
நிலையாய் என்றும்
மனங்களில் இன்றும்
கரம் தனை தூக்கி
கழிப்போடு தொழுவோம்.

No comments:
Write comments

விடியும் வரை

அதிகம்

தேடல்