கல்லாய் நீயும் இருப்பதோ..!

 

பல்லாண்டு காலமாய் ஆண்ட தமிழ்
அடிமையாய் கிடப்பதா?
சொல்லாண்டு தமிழினம்
அடிபட்டு சாவதா?

பொல்லாக்குணம் கொண்ட
கொடியர்கள் எம் மண் ஆழ்வதா?
மெல்ல தமிழ் இனம்
இனி சாகுமா?
வெல்லா போர்களம் எங்கும்
தமிழனுக்கு உண்டா?
எல்லாத்தமிழனும்
ஒன்றே ஆகுவோம்
எள்ளாய் நினைத்தவன்
எலும்பை நொருக்குவோம்

கொல்லா குணம்
இன்னும் தேவையோ?
எல்லாம் அழிந்த பின்
நீ அழுவது நியாயமோ?
செல்லாப் போர்களம்
தோல்வியை நோக்கி
ஷெல்லால் அடித்தாதல்
உன் ஊர் நாசம்..!
கல்லாய் நீயும் இருப்பதோ..!
கடவுளையும் துணைக்கழைப்பதோ..!
மெல்லத் திறந்திடு
உந்தன் சிந்தனையை
பொல்லாப்பகை விரட்ட -புலி
படையுடன் இணைந்திடு
நல்லார் உலகை படைக்க
நாமும் இணைவோம்
சொல்லார் எம் மீதொரு பழி
எதிர் காலத்தார்
எல்லாம் எமதாகும்
எதிரியை அழித்திட திடம் கொண்டால்..!

No comments:
Write comments

விடியும் வரை

அதிகம்

தேடல்