தியாகத்தின் திரி கருகி
மயானத்தில் நீதி புதைந்த நாள் இன்று
கண்ணீரில் ஊறிய கண்கள்
கார் முகிலால் மூடிய நெஞ்சம்
வெம்பி வெம்பி வீங்கிய
வெடிக்காத இதயத்தின் விளிம்புகள்
போர் ஓய்ந்த பின்னும்
பெறுகின்ற அமைதியின் அமுக்கம்
ஓ
.. என அழ எண்ணும் பொழுதும் - நீ
நெஞ்சுரம் தந்த பாடம் தடுக்கிறது
பேரலையிலும் கலங்காத மனம் -உன் துயரில்
அகிம்சை விதையில் ஆளமாகப் புதையுண்டு
விழித்தெழும் வித்தாக முளை
முனை உடைக்கிறது
குற்றுயிரில் வாடும் நீதியைக் காக்க நீ
குவளையிலே நீர் கொடுத்தாய்
குருதியில் வேள்வி காணும் கயவரிற்க்கு-உன்
குறிக்கோள் பகலிலே
உடுக்கையின் ஒளியாயிற்றோ
வெள்ளைக் கொடி பறக்க நீ எடுத்த முயற்சி உன் உடலின்
இறுதிப் பயணத்தின் போர்வையானதோ
மரணித்தது உன் உடல் மட்டும்தானே
அதனால்தான் உன் நோக்கம்
பல சேவைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது
பாரதத் தாய் புனிதமாய் எண்ணும் - அகிம்சை
உனக்கு மாத்திரம்
ஏன் பாடையிலே போகும் வரை மௌனமாயிற்று
பள்ளம் பார்த்து ஓடுகின்ற வெள்ளம் இவர்கள் - உன்
கொள்கையின் வலிமையை
உரசிப்பார்க்க முடியாத மடையர்கள்
உன் மறைவு எமக்கு உண்மையான
உண்மையைப் பிறப்பித்துத் தந்;து போயிருக்கிறது
உனது மறைவினால் ஓர் புதுயுகம்
ஒளி பெற்றிருக்கிறது
உன் எணண்த்தில் உதித்த தமிழீழம் - யாராலும்
தடுக்க முடியாத ஓர் பிரசவம்.
திலீபனின் தமிழீழம் தடுக்க முடியாத ஓர் பிரசவம்....
அதிகம்
-
தமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு - எங்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு கடல் சூழ்ந்த யாழ்பாணம் படகு போல் இருக்கும்! கரை மணலில் நண்டு ஏதே...
-
தமிழே! உயிரே! வணக்கம்! தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்! அமிழ்தே! நீ இல்லை என்றால் அத்தனையும் வாழ்வில் கசக்கும்! புளிக்கும்! தமிழே!...
-
என்னடா தோழா செருக்களமா? அட எங்கேயடா? எனக் கூவி சொன்னவன் நின்ற மலை முடியின்மிசை துள்ளி அவாவுடன் தாவி என்னிரு கண்கள் எதிரினிலே தொலை இடத...
-
தேனைப் பொழிந்தும் கணிகள் சொரிந்தும் செங்கரும்பைப் பிழிந்தும் ஆநெய் கறுவாஏலம் கலந்தும் அமுதாய்த் தமிழ்ப் புலவன் ஊனை உயிரை உருக்கும் தமி...
-
முடங்கி வளைந்த முதுகே! நிமிர்வாய்! நடுங்கிக் கிடந்த நாட்கள் தொலைந்தன! காய்ந்த தமிழன் கண்ணை விழித்தான்! தேய்ந்த வீரம் திரும்பி வந்தது! நி...
-
முடியோடு முன்னாளில் மூவேந்தர் புகழோடு முரசி னோடு கொடியோடு மாற்றார்முன் குனியாத மார்போடு கொற்றத் தோடு படையோடு தனியான பண்போடு பிறநாடு...
-
தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை! தலைமீது சுமக்கின்றான் அடிமை என்னும் சொல்லை! தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை! எதிரியைத் தலைவனாய் எண்ணுக...
-
(02-11-2007 வெள்ளி காலை 06.10 மணியளவில் சிறீலங்கா அரச பயங்கரவாதிகளின் வான்குண்டு வீச்சு தாக்குதலில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்...
No comments:
Write comments