கண்விழித்த படையினைப் போல்
கதிர் விழித்த வானகத்தில்
பண்ணிசைத்த குருகினங்கள்
பறந்து வரும்.. விடுதலையின்
பொன்னினைவு பாய்ந்து வரும்!
புலம்பலிலே தமிழரசி
முன்னிரவில் சொன்னதெலாம்
முகஞ்சிவக்க வெறிபடைக்கும்!
நீலநெடு வரைப்புறத்தில்
நெஞ்சினிக்க வாய் திறந்து
காலமுனி யுரைத்தகளம்
கண்டுவர மனந்துடிக்கும்!
ஓலமிட்ட சங்கொலியால்
உணர்ச்சிகொண்டு நின்றபடை
வேலெடுத்து நின்றதுபோல்
விழியிரண்டும் துடிதுடிக்கும்!
அன்னையிடம் குடித்தமுலை
அமுதத்தின் தமிழ்மானம்
என்னுயிரில் இரத்தத்தில்
இணைந்துநின்ற காரணத்தால்
கன்னிமகள் தமிழணங்கின்
கறைதுடைத்து நொடிப்பொழுதில்
பொன் முடியைக் கொண்டுவரப்
போர்நெஞ்சம் வழிபார்க்கும்!
இவ்வணமாய் நினைவலைகள்
எழுந்தடித்த நெஞ்சத்தில்
வெவ்வேறு திட்டமெலாம்
வேர்விட்டும் போர்க்களத்தில்
கொவ்வைநிறச் செங்குருதி
கொட்டுதற்குக் கண்ணெதிரே
எவ்வழியுந் தோன்றாமல்
இளமேனி பதைபதைக்கும்!
எத்தனைநாள் எடுத்தகொடி
எத்தனைநாள் அமைத்தபடை
இத்தனைக்கும் களமெங்கே...?
எனப்புலம்பி நின்றவனை
குத்துபடை மறவர்களில்
குன்றமிசை யிருந்தொருவன்
தித்திக்கும் பாவலரே...
செருக்களமா? அதோ என்றான்!
காலையும் களமும்

About Eelam
Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.
அதிகம்
-
தமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு - எங்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு கடல் சூழ்ந்த யாழ்பாணம் படகு போல் இருக்கும்! கரை மணலில் நண்டு ஏதே...
-
தமிழே! உயிரே! வணக்கம்! தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்! அமிழ்தே! நீ இல்லை என்றால் அத்தனையும் வாழ்வில் கசக்கும்! புளிக்கும்! தமிழே!...
-
என்னடா தோழா செருக்களமா? அட எங்கேயடா? எனக் கூவி சொன்னவன் நின்ற மலை முடியின்மிசை துள்ளி அவாவுடன் தாவி என்னிரு கண்கள் எதிரினிலே தொலை இடத...
-
தேனைப் பொழிந்தும் கணிகள் சொரிந்தும் செங்கரும்பைப் பிழிந்தும் ஆநெய் கறுவாஏலம் கலந்தும் அமுதாய்த் தமிழ்ப் புலவன் ஊனை உயிரை உருக்கும் தமி...
-
முடங்கி வளைந்த முதுகே! நிமிர்வாய்! நடுங்கிக் கிடந்த நாட்கள் தொலைந்தன! காய்ந்த தமிழன் கண்ணை விழித்தான்! தேய்ந்த வீரம் திரும்பி வந்தது! நி...
-
முடியோடு முன்னாளில் மூவேந்தர் புகழோடு முரசி னோடு கொடியோடு மாற்றார்முன் குனியாத மார்போடு கொற்றத் தோடு படையோடு தனியான பண்போடு பிறநாடு...
-
தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை! தலைமீது சுமக்கின்றான் அடிமை என்னும் சொல்லை! தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை! எதிரியைத் தலைவனாய் எண்ணுக...
-
(02-11-2007 வெள்ளி காலை 06.10 மணியளவில் சிறீலங்கா அரச பயங்கரவாதிகளின் வான்குண்டு வீச்சு தாக்குதலில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்...
No comments:
Write comments