எனக்கு பசி தாகம் மோகம்
உடனே உடனே
ஒரேயடியாய் தீர்க்க
ஓரிடம் வேண்டும்
இரத்தம் சதை
இன்னும்பிற
என்பற்கள் நற நறக்க
கண்கள் சிவசிக்க
உடல்கொதி கொதிக்க
வீதியில் இறங்கி
விறு விறுவென
நுழைந்தேன்
யாழ் வைத்தியசாலை
நாசிகள் கூட
நாசம்பண்ணியதில்லையாமே
நான்செய்துபார்த்தாலென்ன
நுழைந்தேன்
நேயாளிகள்வரிசையாய்
நொய்ந்துபோய் சே
நோய்தான் வந்துவிட்டதே
இனி இருந்தென்ன
இறந்தென்ன -என்
இயந்திர துப்பாக்கி
இயங்கியது
ஓ....வென ஒரு ஓலம்
ஓடிவந்தனர் தாதியர்
வெள்ளையுடையில்
என்மனதோ கறுப்பானது
என்ன கவிஞர்
எழுதி குவிக்கின்றனர்
பெண்கள் முகத்தையும்
மார்பகத்தையும்
என்னைபோல் மெதுவாய்
கத்திகொண்டு
சிறிது சிறிதாய்
மெல்ல மெல்ல
கீறி குத்தி
வழியும் குருதியை
வாஞ்சையுடன்
ரசித்து ருசித்து
கையை உடைத்து
காலை முறித்து
கழுத்தையறுத்து- என்
வீரத்தையும்
மயங்கிகிடந்த
மங்கையர்மீது-என்
வீரியத்தையும்
மீண்டும் மீண்டும்
மீழ்பரிசீலனை
செய்துகொண்டெழுந்தபோது
எங்கேயோ ஓரு
குழந்தையின்
குவா குவா
கூக்குரல்....
குழந்தையொன்று
குறைகூறுவதா-என்வீரத்தை
செல்லமாய்தூக்கி
சுற்றி
சுவரில்ஓரடி
சுவரெங்கும்சித்திரமாய்
இரத்தம்
எதிரே இன்னும்சிலர்
இறைவனுக்கடுத்ததாய்
எல்லோரும்
இவர்களைத்தான்
வணங்குவார்களாமே??
பாவம்
பைத்தியகார வைத்தியர்கள்
எல்லேரும் என்னை வணங்கியபடி
வெடிகுண்டொன்றை வீசி
ஆசீர்வதித்துவிட்டு
வெளியேவந்து
ஆசுவாசமாய்
பீடி ஒன்றை உருவி
பற்றவைத்து
புகையை
இழுத்துவிட்டேன்
இந்த தேசத்துமக்களின்
ஓலங்களைபோலவே
பீடி புகையும்
காற்றில் கரைந்து
காணாமல்போனது
இப்போ
புரிந்திருக்கும்உங்களிற்கு
நான் யாரென்று
காந்தி தேசத்தின்
காவலன்
ஜெய் கிந்...................
நான்....!!
அதிகம்
-
தமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு - எங்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு கடல் சூழ்ந்த யாழ்பாணம் படகு போல் இருக்கும்! கரை மணலில் நண்டு ஏதே...
-
தமிழே! உயிரே! வணக்கம்! தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்! அமிழ்தே! நீ இல்லை என்றால் அத்தனையும் வாழ்வில் கசக்கும்! புளிக்கும்! தமிழே!...
-
என்னடா தோழா செருக்களமா? அட எங்கேயடா? எனக் கூவி சொன்னவன் நின்ற மலை முடியின்மிசை துள்ளி அவாவுடன் தாவி என்னிரு கண்கள் எதிரினிலே தொலை இடத...
-
தேனைப் பொழிந்தும் கணிகள் சொரிந்தும் செங்கரும்பைப் பிழிந்தும் ஆநெய் கறுவாஏலம் கலந்தும் அமுதாய்த் தமிழ்ப் புலவன் ஊனை உயிரை உருக்கும் தமி...
-
முடங்கி வளைந்த முதுகே! நிமிர்வாய்! நடுங்கிக் கிடந்த நாட்கள் தொலைந்தன! காய்ந்த தமிழன் கண்ணை விழித்தான்! தேய்ந்த வீரம் திரும்பி வந்தது! நி...
-
முடியோடு முன்னாளில் மூவேந்தர் புகழோடு முரசி னோடு கொடியோடு மாற்றார்முன் குனியாத மார்போடு கொற்றத் தோடு படையோடு தனியான பண்போடு பிறநாடு...
-
(02-11-2007 வெள்ளி காலை 06.10 மணியளவில் சிறீலங்கா அரச பயங்கரவாதிகளின் வான்குண்டு வீச்சு தாக்குதலில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்...
-
தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை! தலைமீது சுமக்கின்றான் அடிமை என்னும் சொல்லை! தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை! எதிரியைத் தலைவனாய் எண்ணுக...




No comments:
Write comments