அழிவுற எழுதமிழ்
மாந்தர் களத்தினிலே
சுறவுகள் கடல் மிசை
வெறியொடு சுழல்வன
போலும் சுழல்கின்றார்...
நறநற வென எயி
றொலிசெய மறவர்கள்
ஆட்டம் நடக்குதடா!
புறமெனு மழகிய
தமிழ்க்குல வீரரின்
வாழ்க்கை வீண்போமோ?
மாமலை யொத்தன
தமிழரின் ஓங்கிய
தோள்கள்! சினங்கொண்டு
தாமரை யொத்தன
செந்நிற அழகொடு
விழிகள்! ஓவென்னும்
தீமலை நெருப்பினை
யொத்தன சுழன்றன
வீரர் மூச்சுக்கள்!
தேமதுரத் தமிழ்
உயிரெனக் கொண்டவர்
திரண்டார்! போர் செய்தார்!
தடியடி தலைமிசை
படவிழும் அரவென
வீழ்ந்தார் பகை வீரர்!
இடிபட வேரொடு
விழுமரம் என உடல்
சாய்ந்தார் சிலரங்கே!
அடிபுய லிடைநிலை
கெடுமொரு புவியென
ஆனார்... அம்மம்மா
பொடிபடு தசையுடல்
சுமந்தவர் அழிவுறு
போரை என்னென்பேன்?
தாவிடு வேங்கைகள்
குகையிடை ஒளிந்தன
போலுந் தமிழ்வீரர்
காவிய மார்பிடை
ஒளிந்தன குண்டுகள்!
களத்தே செவ்வானின்
ஓவியம் வரைந்தது
தமிழரின் குங்குமக்
குருதி நீரோட்டம்!
சாவிலும் விடுதலை
பெறுவது மெய்யென
வீழ்ந்தார் தமிழ்நெஞ்சர்!
பறவையின் நிரையென
வானிடை யெழுந்தன
பகைவர் ஊர்திகளே!
சிறகுகள் துகள்பட
அவைமிசை பறந்தன
தமிழர் கருவிகளே!
திறலுடை தமிழரின்
பொறிபல கணைகளை
அள்ளிச் சிதறினவே!
விறகுகள் எனமதில்
வீடுக ளெரிந்தன!
ஊர்கள் வீழ்ந்தனவே!
ஆவியில் இனியது
தமிழென உணர்ந்தவர்
அழகின் வடிவுடையார்...
தேவியர் மான்குலத்
திரளென அமர்க்களம்
ஆடிச் சிவக்கின்றார்!
தாவிடு வேல்விழி
தமிழ்வழி கொண்டவர்
கற்பின் தழல்முன்னே
சாவிடை கொழுநரை
அனுப்பிய பகைவரின்
தானை எரியாதோ?
கொடும்பொறிக் குண்டுகள்
வெடித்தெழ வானகம்
கூந்தல் விரித்தாற்போல்
நெடும்புகை எழுந்தது!
பகைவரின் கொடிகளும்
நெருப்பி லாடினவே!
கடும்புயல் அடித்ததை
நிகர்த்தது களத்திலே
தமிழர் போராட்டம்!
திடும் திடுமென ஒலி
செய்தது பகைவரின்
ஓட்டம் செவியெல்லாம்!
ஆடின கழுகுகள்...
வான்மிசை! அழுகின
பிணத்தின் இரைதேடி
ஓடின நரிகளும்
தெருப்புற நாய்களும்!
ஊரே காடாகி
மூடின பிணங்களின்
விழிகளைக் கரடிகள்
மோந்து களந்தோறும்
தேடின! பூமியின்
திசைகளும் நாறின!
புழுக்கள் திரண்டனவே!
வீரம்

About Eelam
Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.
அதிகம்
-
தமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு - எங்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு கடல் சூழ்ந்த யாழ்பாணம் படகு போல் இருக்கும்! கரை மணலில் நண்டு ஏதே...
-
தமிழே! உயிரே! வணக்கம்! தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்! அமிழ்தே! நீ இல்லை என்றால் அத்தனையும் வாழ்வில் கசக்கும்! புளிக்கும்! தமிழே!...
-
என்னடா தோழா செருக்களமா? அட எங்கேயடா? எனக் கூவி சொன்னவன் நின்ற மலை முடியின்மிசை துள்ளி அவாவுடன் தாவி என்னிரு கண்கள் எதிரினிலே தொலை இடத...
-
தேனைப் பொழிந்தும் கணிகள் சொரிந்தும் செங்கரும்பைப் பிழிந்தும் ஆநெய் கறுவாஏலம் கலந்தும் அமுதாய்த் தமிழ்ப் புலவன் ஊனை உயிரை உருக்கும் தமி...
-
முடங்கி வளைந்த முதுகே! நிமிர்வாய்! நடுங்கிக் கிடந்த நாட்கள் தொலைந்தன! காய்ந்த தமிழன் கண்ணை விழித்தான்! தேய்ந்த வீரம் திரும்பி வந்தது! நி...
-
முடியோடு முன்னாளில் மூவேந்தர் புகழோடு முரசி னோடு கொடியோடு மாற்றார்முன் குனியாத மார்போடு கொற்றத் தோடு படையோடு தனியான பண்போடு பிறநாடு...
-
தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை! தலைமீது சுமக்கின்றான் அடிமை என்னும் சொல்லை! தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை! எதிரியைத் தலைவனாய் எண்ணுக...
-
(02-11-2007 வெள்ளி காலை 06.10 மணியளவில் சிறீலங்கா அரச பயங்கரவாதிகளின் வான்குண்டு வீச்சு தாக்குதலில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்...
No comments:
Write comments